இந்தியாவை தவிர பிற அணிகளுக்கு அநீதி இழைத்த ஐசிசி - மைக்கல் வாகன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை தவிர பிற அணிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் குற்றம் சாட்டியுள்ளார். நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் இன்று மோதவுள்ளது. இந்நிலையில் அரையிறுதி போட்டியின் அட்டவணை குறித்தும், ஐசிசி குறித்தும் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன்  குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி இருக்க வேண்டும் எனவும், அதற்கு மாறாக தென்னாப்ரிக்க, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணி களம்கண்ட பெரும்பாலான போட்டிகள் அவர்களுக்கு சாதகமான அட்டவணையை ஐசிசி உருவாக்கி கொடுத்துள்ளதாகவும் மைக்கல் வாகன் தெரிவித்துள்ளார். 

Night
Day