இந்தியா-இலங்கை அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா-இலங்கை இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் கொழும்புவில் இன்று தொடங்குகிறது. டி20 தொடரில்  3 போட்டிகளிலும் வென்று இலங்கை அணியை  இந்தியா ஒயிட் வாஷ் செய்தது. இந்த நிலையில் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. ரோகித் தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில், விராட் கோலியும் இணைந்துள்ளதால் அணியின் பலம் அதிகரித்துள்ளது. இலங்கை அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களான மதீஷா பதிரானா, தில்ஷன் மதுஷங்கா காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளதால் அந்த அணி பின்னடைவை சந்தித்துள்ளது. இருப்பினும் டி20 தோல்விக்கு பழி தீர்க்கும் உத்வேகத்துடன் இலங்கை அணி விளையாடும் என்பதாலும், ஒரு நாள் தொடரையும் வெல்லும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்கும் என்பதாலும் இன்றைய போட்டி அதிக எதிர்பாப்பை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day