இந்திய அணிக்கு இங்கி. முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் பாராட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

5 உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இல்லாத போதிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது சாதனையாக பார்க்கப்படுவதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார். இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. 4 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்திய அணி 3க்கு 1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், 5 உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இல்லை, டாஸ் வெல்லவில்லை, முதல் இன்னிங்ஸில் பின்னடைவு - ஆனாலும் வெற்றி என இந்திய அணியை பாராட்டியுள்ளார். மேலும், இந்த தொடரில் இந்திய அணியில் நிறைய இளம்வீரர்கள் விளையாடியதாகவும், அவர்கள் நீண்டகாலம் விளையாடுவார்கள் என்றும் மைக்கேல் வாகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

varient
Night
Day