இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய கால்பந்து அணியின் முன்னணி நட்சத்திரமான சுனில் சேத்ரி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டு இந்திய கால்பந்து அணியில் இடம்பிடித்த சுனில் சேத்ரி, தன்னுடைய அசத்தலான ஆட்டத்தால் இந்திய அணியின் கேப்டனாக உருவெடுத்தார். தொடர்ந்து 19 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிய சுனில் சேத்ரி, இதுவரை 94 கோல்களை அடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் வரும் ஜூன் 6ம் தேதி நடைபெறவுள்ள குவைத்துக்கு எதிரான கால்பந்து போட்டிதான் தன்னுடைய கடைசி ஆட்டம் என அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 

Night
Day