இந்திய கிரிக்கெட் வீரரான மயங்க் அகர்வால் நலமாக இருப்பதாக தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய கிரிக்கெட் வீரரான மயங்க் அகர்வால், நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வீரரான மயங்க் அகர்வால், தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கிரிக்கெட் தொடரில் கர்நாடக அணியின் கேப்டனாக செயல்படுகிறார். வரும் பிப்ரவரி 2ம் தேதி குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்காக, தனது அணியுடன் விமானத்தி புறப்பட்டார். அப்போது, மயங்க் அகர்வாலுக்கு திடீரென தொண்டை பகுதியில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, சிகிச்சை பெற்றும் வரும் மயங்க் அகர்வால் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

Night
Day