இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற கவனம் செலுத்தி வருகிறோம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் போட்டிகளுக்கு முன்னேற முடியும் என்பதால் அதில் கவனம் செலுத்தி வருவதாக சென்னையின் FC பயிற்சியாளர் ஓவன் காயில் தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் ஐ.எஸ்.எல் போட்டிகள் தொடர்பாக சென்னையின் FC பயிற்சியாளர் ஓவன் காயில் மற்றும் அணியின் கேப்டன் ரியான் எட்வர்ட்ஸ் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது பேசிய பயிற்சியாளர் ஓவன் காயில், 
இந்த ஆண்டு உள்ள சென்னை அணியை பொறுத்தவரை நிறைய இளம் வீரர்களை வைத்து கட்டமைத்துள்ள ஒரு அணி என்றும், முந்தைய போட்டிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தாலும் கோல் அடிக்க முடியாத காரணத்தால் தோல்வி அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். நிச்சயம் வீரர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.

Night
Day