இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வரும் இங்கிலாந்து அணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து போராடி வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 477 ரன்கள் குவித்தது.  477 ரன்கள் குவித்த இந்திய அணியில் ரோகித் சர்மா, கில் ஆகியோர் சதம் அடித்தனர். 259 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கிராவ்லி ரன் குவிக்காமலும், டக்கெட் 2 ரன்னிலும் அஸ்வினின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஓலி போப்பும் 19 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 2 ரன்னிலும் அஸ்வினிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். 5 விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து போராடி வருகிறது.

Night
Day