ஐபிஎல் - இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி நான்காவது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலாவது குவாலிஃபையர் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் எடுத்தது. பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அதிரடியாக ஆடி அரை சதம் விளாசினர். கொல்கத்தா அணி 13.4 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இதுவரை கொல்கத்தா அணி 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

Night
Day