ஐ.பி.எல். கனவு அணிக்கு கேப்டனாக தோனி தேர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐ.பி.எல். கனவு அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனியை முன்னாள் வீரர்கள் தேர்வு செய்துள்ளனர். ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு இதுவரை 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. ஐ.பி.எல். தொடரை கொண்டாடும் விதமாக சிறந்த வீரர்களை கொண்ட கனவு அணி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த அணியை தேர்ந்தெடுக்கும் குழுவில் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரம், மேத்யூ ஹைடன், டாம் மூடி, டேல் ஸ்டெய்ன் மற்றும் 70 பத்திரிகையாளர்களும் இடம்பெற்றனர். இந்த ஐபிஎல் கனவு அணிக்கு தோனி கேப்டனாக தேர்வாகி இருக்கிறார். இதில் விராட் கோலி, கிறிஸ் கெய்ல், டேவிட் வார்னர், ரெய்னா, டிவில்லியர்ஸ், சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, பொல்லார்டு, ரஷீத்கான், சுனில் நரைன், யசுவேந்திர சாஹல், மலிங்கா, பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Night
Day