ஒலிம்பிக் - இந்திய வீரர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தப் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகி இருக்கிறது.

ஒலிம்பிக் மல்யுத்த போட்டியின் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெரவாத் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். காலிறுதிப் போட்டியில் அல்பேனிய நாட்டு வீரர் ஜிலிம்மிகானை 12க்கு பூஜ்யம் என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். இந்தப் போட்டியில் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடிய அமன் ஷெரவாத், அல்பேனிய வீரரை ஒரு புள்ளியை கூட பெற வைக்கவில்லை. 

முன்னதாக நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் வடக்கு மாசிடோனியா வீரர் விளாடிமிர் எகோரோவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்திலும் தொடக்கத்தில் இருந்து ஆக்ரோஷமாக விளையாடிய அமன் ஆதிக்கம் செலுத்தினார். முதல் பாதியில் 5-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றார். தொடர்ந்து அவரின் ஆதிக்கம் நீடிக்கவே 10-0 என்ற கணக்கில் விளாடிமிர் எகோராவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

Night
Day