கடைசி டி20 போட்டி - சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்திய இந்தியா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி முழுமையாக வென்று அசத்தியுள்ளது. இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டிகளில் வென்று தொடரை ஏற்கெனவே இந்திய அணி கைப்பற்றிய நிலையில், கடைசி ஆட்டம் பல்லகெலேவில் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 137 ரன்களை எடுத்தது. தொடர்ந்து, 138 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 137 ரன்களை எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதனையடுத்து, நடைபெற்ற சூப்பர் ஓவர் சுற்றில் இந்தியா வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது. 

Night
Day