கடைசி 11 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் சொதப்பும் சுப்மன் கில்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய அணியின் இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவில் ரன்களை குவிக்க தொடங்குவார்கள் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியுள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள சுப்மன் கில், கடைசியாக விளையாடிய 11 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் தடுமாறி வருகிறார். இதுகுறித்து கூறியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், இந்திய அணியில் உள்ள இளம்வீரர்கள் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை எனவும், அவர்களது திறமை வெளிப்படுத்தும் வரை பொறுமை காக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் விரைவில் ரன்களை குவிக்க தொடங்குவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். 

varient
Night
Day