கன்னியாகுமரி: வாள் விளையாட்டு பயிற்சியாளர் மீது மாணவர்கள் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தன்னிடம் பயிற்சி பெறும் மாணவர்கள், தான் பணம் கேட்பதாக குற்றம் சாட்டுவதாக கன்னியாகுமரி மாவட்ட வாள்பயிற்சி மைய ஆசிரியர் வேதனை தெரிவித்துள்ளார். கல்லுப்பாலம் பகுதியில் இயங்கி வரும் தமிழக வாள் விளையாட்டு கழக பயிற்சி மையத்தில் அமிர்தராஜ் என்பவர் வாள்விளையாட்டு பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவரிடம் பயிற்சி பெறும் 2 மாணவர்கள், தாங்கள் போட்டிகளில் வெற்றி பெறும் பரிசுத் தொகையை அமிர்தராஜ் கேட்பதாக குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவர்களை போட்டிக்கு அழைத்து செல்லும் தொகையை தானே ஏற்றுக்கொண்டு, போட்டி முடிந்து திரும்பியவுடன் பயணத் தொகையை மட்டுமே கேட்பதாகவும், மாணவர்கள் புகார் குறித்து விளையாட்டு அமைச்சகத்தில் புகார் மனு கொடுத்துள்ளதாகவும் அமிர்தராஜ் தெரிவித்துள்ளார்.

Night
Day