கரலாக்கட்டையால் இளைஞரை தாக்கிய ஜிம் மாஸ்டர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிரா மாநிலத்தில் உடற்பயிற்சி கூடத்தில் இளைஞரை கரலாக்கட்டையால் தாக்கிய ஜிம் பயிற்சியாளார் கைது செய்யப்பட்டார்.

மும்பையில் இயங்கி வரும் ஜிம் ஒன்றில் யோகேஷ் ஷிண்டே என்ற இளைஞர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது, யோகேஷ் ஷிண்டேவுக்கும், ஜிம் பயிற்சியாளர் தாராவி நக்கேல் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த தாராவி நக்கேல், உடற்பயிற்சி கூடத்திலிருந்த கரலாக்கட்டையால், யோகேஷ் ஷிண்டேவை தாக்கினார். இதில், அவருக்கு தலை பகுதியில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

Night
Day