கிருஷ்ணகிரியில் கால்பந்து பயிற்சி முகாம் - மாணவ, மாணவிகள் பங்கேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரியில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி முன்னாள் கால்பந்து வீரர்கள் நடத்திய இலவச கால்பந்து பயிற்சி முகாமில் திரளான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 1980களில் படித்த கால்பந்தாட்ட வீரர்கள் குழு சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவச கால்பந்தாட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் செல்போன், டிவி உள்ளிட்ட மோகத்தில் மூழ்கியுள்ளதால் பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. எனவே மாணவ, மாணவிகளின் செல்போன் மோகத்தை குறைக்கும் விதமாக இந்த ஆண்டு முதல் இலவச கால்பந்தாட்ட பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர். 

Night
Day