குடிசைவாசியாக இருந்து கோபுர வாசியாக மாறிய ஜெய்ஸ்வால்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மும்பை ஆசாத் மைதானம் அருகே குடிசை வீட்டில் வசித்து வந்த இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஐந்தரை கோடியில் கனவு இல்லத்தை விலைக்கு வாங்கியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அதிரடி பேட்டிங்கால் இந்திய அணியில் இடம்பிடித்தார். இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது இரண்டாவது டெஸ்டில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மும்பை ஆசாத் மைதானம் அருகே குடிசை வீட்டில் வசித்து வந்த ஜெய்ஸ்வால், பானிபூரி வியாபாரத்தில் ஈடுபட்டுவந்தார். தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் நல்ல ஊதியம் பெற்று வரும் ஜெய்ஸ்வால், கிழக்கு பாந்திராவில் ஐந்து கோடியே 40 லட்ச ரூபாயில் ஆயிரத்து 100சதுர அடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார்.

Night
Day