குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவரை முடிக்காததால் ரிஷப் பண்ட்-க்கு அபராதம் விதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவரை முடிக்காததால் டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே - டெல்லி அணிகள் மோதின. இப்போட்டியில், டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்கு பந்தை வீசாத டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடைசி 2 ஓவரின்போது பவுண்டரி எல்லையில் 4 வீரர்கள் மட்டுமே பீல்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day