கேப்டனாக டெல்லி அணிக்கு திரும்பிய ரிஷப் பண்ட்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ள ரிஷப் பண்டை மீண்டும் கேப்டனாக டெல்லி அணி நியமித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், கடந்தாண்டு ஐபிஎல் தொடர் முழுவதிலும் விளையாட முடியாமல் போனது. இதனால் ரிஷப் பண்டிற்கு பதிலாக டேவிட் வார்னர் கேப்டனாக செயல்பட்டார். இந்நிலையில், காயத்தில் இருந்து குணமடைந்த ரிஷப் பண்ட் இந்த சீசனில் மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பியுள்ளார். இதனைத்தொடந்து, ரிஷப் பண்டை தங்களது கேப்டனாக நியமித்து டெல்லி அணி நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Night
Day