கோலியின் ஓய்வு குறித்து இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் கருத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய அணி வீரர் விராட் கோலி விரைவில் தன் ஓய்வை அறிவிப்பார் என தான் கருதுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வாகன், விராட் கோலியின் திறனைக்கண்டு அனைவரும் அவர் இன்னும் 5 ஆண்டுகள் கிரிக்கெட்டில் தொடர்வார் என கருதுகிறார்கள், ஆனால் அவர் தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாகி விட்டதால் தன் குடும்பத்துடன் பொழுதை கழிக்க விரும்புகிறார் என தான் எண்ணுவதாக தெரிவித்தார். மேலும் தன் குழந்தைகளுடன் விராட் கோலி பொழுதை கழிக்க விரும்புவதால் விரைவில் அவர் தன் ஓய்வை அறிவிப்பார் என தான் கருதுவதாக மைக்கேல் வாகன் தெரிவித்தார்.

Night
Day