கோவை பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடக்க விழா - இந்திய வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன் பங்கேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வரும் காலங்களில் தமிழகத்தில் இருந்து அதிக பெண்கள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வார்கள் என இந்திய கிரிக்கெட் வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன் தெரிவித்தார். கோவை பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடக்க விழா கோவை சரவணம்பட்டி-துடியலூர் சாலை யார்ட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன் கலந்து கொண்டு போட்டியில் விளையாடும் வீரர்களை கௌரவித்து ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெண்களுக்கு கிரிக்கெட் போட்டியில் அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.

Night
Day