சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக நீடா அம்பானி மீண்டும் தேர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா சார்பில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனரும், தலைவருமான நீடா அம்பானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 142வது கூட்டம் பாரிசில் தற்போது நடைபெற்று வருகிறது. அதில், இந்தியா சார்பில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக நீடா அம்பானி தேர்வு ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த நீடா அம்பானி, இது மிகப் பெரிய கவுரவம் என்று கூறினார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவரும், உறுப்பினர்களும் தன் மீது நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் அம்பானி தெரிவித்தார். 2016-ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியின் போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின்  உறுப்பினராக முதன்முதலில் நீடா அம்பானி தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Night
Day