சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த ஷிகர் தவான்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னணி வீரர் ஷிகர் தவான் அறிவித்துள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான ஷிகர் தவான், இதுவரை 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மிகச்சிறந்த தொடக்க வீரராக செயல்பட்ட ஷிகர் தவான், கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வெல்வதற்கு உறுதுணையாக இருந்தார். இந்திய அணிக்காக கடந்த 2022ம் ஆண்டு விளையாடிய ஷிகர் தவானுக்கு, இளம் வீரர்களின் வருகையால் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்நிலையில் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவித்துள்ளார். ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களம் இறங்கி இந்தியாவின் பல வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய ஷிகர் தவான், ஓய்வு முடிவை அறிவித்ததால் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day