சாய்னாவுடன் பேட்மிண்டன் விளையாடிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

எழுத்தின் அளவு: அ+ அ-

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவரும், முன்னணி வீராங்கனையுமான சாய்னா நேவாலுடன், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாட்மின்டன் விளையாடினார். 

பத்ம விருதுகள் பெற்ற வீராங்கனைகள் மக்களுடன் உரையாடும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் நடைபெற்று வருகிறது. அவள் கதை - என் கதை என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் சாய்னா நேவால் இன்று உரையாற்றுகிறார். இதற்கான குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கியுள்ள சாய்னா நேவால், அங்குள்ள பாட்மின்டன் அரங்கில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் பாட்மின்டன் விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது. இது தொடர்பாக குடியரசு தலைவர் மாளிகை எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், புகழ்பெற்ற வீராங்கனை சாய்னா நேவாலுடன், குடிரயரசு தலைவர் பாட்மின்டன் விளையாடியது, விளையாட்டின் மீது இயற்கையாகவே அவருக்குள்ள பற்றை வெளிக்காட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day