சுவிட்சர்லாந்து: பனிச்சறுக்கு மாரத்தான் போட்டியில் 11 ஆயிரம் பேர் பங்கேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற 54வது பனிச்சறுக்கு மாரத்தான் போட்டியில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற எங்கடின் ஸ்கிமரத்தான் எனப்படும் பனிச்சறுக்கு போட்டியானது ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். அந்த வகையில், மலஜாவில் இருந்து எஸ்சாண்ட் வரையிலான 42 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடத்தப்பட்ட போட்டியில், 67 நாடுகளில் சேர்ந்த 11 ஆயிரம் வீரர்கள் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் மகளிர் பிரிவில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த வெரோவும், ஆடவர் பிரிவில் நார்வே வீரர் ஒருவரும் முதலிடம் பிடித்தனர்.

varient
Night
Day