சென்னையில் ஐபிஎல் திருவிழா இன்று தொடக்கம் - சிஎஸ்கே உடன் ஆர்சிபி மோதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்று தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோத உள்ளன. இந்நிலையில் சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்த மகேந்திர சிங் தோனி, தனது பதவியை ருத்துராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் இன்று தொடங்க உள்ள ஐபிஎல் போட்டியின் அறிமுகம் நிகழ்ச்சியிலும் ருத்துராஜ் கெய்க்வாட், பங்கேற்க உள்ளார். ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகிஷ் சர்மா மாற்றப்பட்ட நிலையில் தற்போது சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த தோனியும் மாற்றப்பட்டது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இதுவரை, 5 ஐபிஎல் கோப்பையை சென்னை அணிக்கு தோனி பெற்று கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 

Night
Day