சென்னை ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி : இத்தாலி வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் சுமித் நாகல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ஓபன் ஆடவர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் சாம்பியன் பட்டத்தை வென்றார். தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு இணைந்து நடத்தும் சர்வதேச டென்னிஸ் சென்னை ஓபன் ATP சேலஞ்சர்ஸ் தொடர்  நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. 14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்ற நிலையில், நேற்று நடைபெற்ற ஒற்றையர் இறுதி போட்டியில், இந்தியாவின் சுமித் நாகல் இத்தாலியின் லூகா நார்டியை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சுமித் நாகல் அபாரமாக விளையாடி, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் லூகா நாட்டியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவருக்கு கோப்பையுடன் 15 லட்சம் ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட்டது.

Night
Day