சென்னை டெஸ்ட் - இந்திய வீராங்கனை இரட்டை சதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான மகளிர் டெஸ்ட் போட்டியில் இந்திய வீராங்கனை ஷஃபாலி வர்மா இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார்.

இந்தியா, தென்னாப்ரிக்காவுக்கு இடையேயான ஒரு போட்டிக்கொண்ட மகளிர் டெஸ்ட் தொடர் சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 98 ஓவர்கள் முடிவில் 525 ரன்கள் குவித்து அபாரமாக விளையாடி வருகிறது. இப்போட்டியில் இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா 194 பந்துகளில் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார். இப்போட்டியில் ஷபாலி வர்மா அபாரமாக விளையாடியதன் மூலம் மகளிர் டெஸ்ட் தொடரில் அதிவேக இரட்டை சதம் அடித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மிதாலி ராஜ்ஜூக்கு பிறகு இரட்டை சதம் அடித்தவர் என்ற பெருமையையும் ஷபாலி வர்மா பெற்றுள்ளார். 

Night
Day