செஸ் விளையாட்டில் ஆட்சியரை தோற்கடித்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியில் பெண் குழந்தைகளை காப்போம் என்ற திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான பள்ளி மாணவிகளுக்கான செஸ் போட்டிகள் இன்று தொடங்கியது.

புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேற்கு ஒன்றிய அளவிலான பள்ளி மாணவிகளுக்கான சதுரங்க போட்டியினை ஆட்சியர் பிரதீப்குமார் தொடங்கி வைத்தார். இதில் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். அப்போது பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் அக்ஷரா என்ற மாணவி ஆட்சியரை செஸ் விளையாட்டில் தோற்கடித்தார். மாணவிக்கு வாழ்த்து கூறிய ஆட்சியர், தொடர்ந்து அனைவரும் செஸ் போட்டியினைக் கற்று சிறப்பாக விளையாட வேண்டும் என தெரிவித்தார். 

Night
Day