டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் இல்லாததால் ரசிகர்கள் அதிர்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வான வீரர்கள் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இல்லாததால் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். 

17வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக தேர்வான இந்திய அணி வீரர்கள் ஒருவர் கூட இல்லாததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  அதே நேரத்தில், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் கொல்கத்தா அணி வீரர் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தங்கள் அணிகளை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்துள்ளனர். இதனால், எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். 

Night
Day