டி20 உலகக்கோப்பை அரையிறுதி: தென்னாப்ரிக்கா - ஆப்கானிஸ்தான் நாளை மோதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டிகள் நாளை நடைபெறவுள்ளன. டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சூப்பர் 8 சுற்றில் வெற்றி பெற்று இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு நடைபெற உள்ள முதல் அரையிறுதி ஆட்டத்தில் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்ரிக்க அணியும், ரசித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன. தொடர்ந்து, இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ள மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதுகின்றன. இதனால், அரையிறுதியில் வென்று எந்த அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. 

Night
Day