டி20 உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கியது இந்திய அணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. நியூயார்க் நகரில் நேற்று இரவு ஏ பிரிவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 16 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 97 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய இந்திய அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா ரிடையர்ட் ஹர்ட் ஆனார். இந்நிலையில், இந்திய அணி அடுத்ததாக வரும் 9ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

varient
Night
Day