தீவிர வலை பயிற்சியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் தங்கள் டிரெஸ்சிங் ரூமில், சாமி படத்திற்கு மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து பயிற்சியை நேற்று தொடங்கினர். இந்நிலையில், அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தீவிர வலை பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை அணி நிர்வாகம் தங்கள் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

Night
Day