நாகை: மாநில அளவிலான திறந்தநிலை கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே குரவப்புலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான திறந்த நிலை கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகளில் 10 மாவட்டங்களிலிருந்து 600 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். குரவப்புலத்தில் நேஷனல் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி, மாவட்ட நேரு யுவகேந்திரா ஆகியவற்றின் சார்பில் 2024-ம் ஆண்டுக்கான 19-வது மாநில அளவிலான திறந்த நிலை கராத்தே சாம்பியன் ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களிலிருந்து 600 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கராத்தே, கட்டா, சிலம்பம் போன்ற தற்காப்புகலை போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் 7 வயது முதல் 20 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சுழற்கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Night
Day