பாகிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாபர் அசாம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தான் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார். 

இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு பின் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகுவதாக அறிவித்தார். அதன்பிறகு, பாகிஸ்தான் அணியின் டி20 கேப்டனாக ஷாகின் அப்ரிடி நியமனம் செய்யப்பட்ட நிலையில், டி20 உலகக்கோப்பைக்கு முன் மீண்டும் பாபர் அசாம் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் பாகிஸ்தான் வெளியேறியது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார். பணிச்சுமை அதிகமாக உள்ளதால் கேப்டன்சியில் இருந்து விலகி தனது ஆட்டத்தில் கவனம் செலுத்தவுள்ளதாக பாபர் அசாம் கூறியுள்ளார்.

Night
Day