பாக். உடனான போட்டியில் இந்தியா வெற்றிப்பெற அதிக வாய்ப்பு - ஹர்பஜன் சிங்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தான் அணியை வீழ்த்த இந்திய அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை இந்தியா அணி நாளை எதிர்கொள்கிறது. இது குறித்து பேசியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், நாசாவ் கவுண்டி மைதானத்தில் ஏற்கனவே விளையாடியுள்ள இந்திய அணியே இப்போட்டியில் வெற்றிப்பெற அதிக வாய்ப்புள்ளதாகவும், இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் எனவும் கூறியுள்ளார். 

Night
Day