பாபர் அசாமிடம் இருந்து பறிக்கப்படும் கேப்டன் பதவி!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றதை அடுத்து, கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் முடிந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.  தோல்விக்கான காரணம் குறித்த அறிக்கையை பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனும், தேர்வுக் குழு தலைவர் வஹாப் ரியாசும் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஷின் நக்வியிடம் சமர்ப்பித்திருந்தனர். இந்நிலையில், 20 ஓவர் கிரிக்கெட் அணியின் எதிர்காலம் குறித்து பயிற்சியாளர் கிர்ஸ்டன் மற்றும் 35 முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் மோஷின் நக்வி ஆலோசனை நடத்தினார். அதில் முக்கியமாக கேப்டன் பாபர் அசாம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

varient
Night
Day