பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் : இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் நீரஜ் சோப்ரா தகுதிப்பெற்றுள்ளார். இன்று நடைபெற்ற தகுதி சுற்றுப்பிரிவில் 84 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து நீரஜ் சோப்ரா அசத்தினார். இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்ற நீரஜ்சோப்ரா, இந்தியாவிற்காக தங்கப்பதக்கத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் 87 புள்ளி 58 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day