பாரிஸ் பாரா ஒலிம்பிக் - பதக்கம் வென்ற வீரர்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

பாரிஸில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி ஏற்கனவே 3 தங்கம் உள்பட 20 பதக்கங்களை வென்றுள்ள நிலையில் இந்திய வீரர், வீராங்கனைகள், மேலும் 6 பதக்கங்களை வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிப்பதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக கழகப்பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பக்கத்தில், ஆடவருக்கான தனிநபர் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங், தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் - இதன் மூலம் ஹர்விந்தர் சிங் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் முதல் பாராலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது மிகவும் பெருமை அளிப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

ஆடவருக்கான கிளப் த்ரோ F 51 போட்டியில் இந்திய வீரர் தரம்பிர் அவர்கள் 34.92மீ தூரம் எறிந்து புதிய ஆசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக கழகப்பொதுச்செயலாளர்  புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். ஆடவருக்கான உயரம் தாண்டுதல் T64 போட்டியில் இந்திய தடகள வீரரான பிரவீன் குமார் 2.08 மீ உயரம் தாண்டி புதிய ஆசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றிருப்பது மிகவும் பெருமை அளிப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

தங்கப்பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள இந்திய வீரர்கள் ஹர்விந்தர் சிங், தரம்பிர் மற்றும் பிரவீன் குமார் ஆகியோருக்கு தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

அதேபோன்று ஆடவருக்கான குண்டு எறிதல் F46 போட்டியில் இந்திய வீரர் சச்சின் கிலாரி மற்றும் கிளப் எறிதல் F 51 போட்டியில் இந்திய வீரர் பிரணவ் சூர்மா ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், ஆடவருக்கான  ஜூடோ 60 கிலோ J 1 போட்டியில் இந்திய வீரர் கபில் பர்மர் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளதற்கு தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்

பாரிஸில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இதுவரை 6 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் உட்பட 26 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் இந்தியா 14வது இடத்திற்கு முன்னேறி இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். பாரா ஒலிம்பிக் போட்டியில், இதுவரை இல்லாத வகையில் அதிக பதக்கங்களை இந்தியாவிற்கு பெற்று தந்து பெருமை சேர்த்துள்ள அனைத்து வீராங்கனைகளுக்கும், வீரர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

varient
Night
Day