பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் - ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

களிமண் ஆடுகளத்தில் ராஜா என்று அழைக்‍கப்படும் ரபேல் நடால், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

'கிராண்ட்ஸ்லாம்' டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினை சேர்ந்த ரபேல் நாடல், ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் 6-3, 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ரபேல் நடாலை வீழ்த்தி 2வது சுற்றுக்‍கு முன்னேறினார். இதுவரை பிரெஞ்சு ஓபனில் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் உள்பட 22 முறை கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ரபேல் நடால் வெற்றி பெற்றுள்ளார்.

Night
Day