புரோ கபடி லீக்: அரையிறுதியில் ஜெய்ப்பூர், பாட்னா அணிகள் தோல்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புரோ கபடி லீக் போட்டியின் இறுதிப்போட்டிக்கு, புனே பால்டன் அணியும், அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் முன்னேறியுள்ளன. 10-வது புரோ கபடி லீக் போட்டியில் 12 அணிகள் பங்கேற்று, தலா 2 அணிகளுடன் மோதின. இதில், புனேரி பால்டன் மற்றும் நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் நேரடியாக அரை இறுதி சுற்றை எட்டியது. தெலங்கானாவில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் பாட்னா மற்றும் புனே அணிகள் மோதிய நிலையில், 37க்கு 21 என்ற கணக்கில் புனே அணி வெற்றி பெற்றது. இதேபோல் மற்றொரு அரையிறுதி ஜெய்ப்பூர் அணியை எதிர்கொண்ட அரியானா அணி, 27க்கு 31 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் புனே - ஹரியானா அணிகள் மோதவுள்ளன. 

Night
Day