போதிய வசதிகள் இல்லாததால் அதிருப்தியில் இந்திய வீரர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக பயிற்சி மேற்கொள்ளும் மைதானத்தில் போதிய வசதிகள் இல்லை என்று இந்திய வீரர்கள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நாளை தொடங்கும் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக, நியூயார்க் சென்றுள்ள இந்திய வீரர்கள், அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அங்கு அமைக்கப்பட்டுள்ள மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள போதிய வசதிகள் இல்லை என்றும், உணவு வசதியும் சராசரியாகவே இருப்பதாகவும் இந்திய அணி தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. பிட்ச் முதல் அனைத்து ஏற்பாடுகளுமே தற்காலிமாகவும் சராசாரியாகவும் இருப்பதாக தெரிவித்துள்ள இந்திய வீரர்கள், இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Night
Day