மகளிர் ஆசிய கோப்பை - இலங்கை வீராங்கனையின் வரலாற்று சாதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இலங்கை வீராங்கனை சமாரி அத்தபத்தூ வரலாற்று சாதனை படைத்துள்ளார். மகளிர் ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கை மற்றும் மலேசிய அணிகள் மோதின. இதில், இலங்கை அணி 144 ரன்கள் வித்தியாசத்தில் மலேசிய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில், இலங்கை அணி வீராங்கனை சமாரி அத்தபத்தூ 69 பந்துகளில் 119 ரன்கள் விளாசி சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து, மகளிர் ஆசிய கோப்பை தொடர் வரலாற்றிலேயே சதம் விளாசிய முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 

Night
Day