மகளிர் டி20 உலகக்கோப்பை : தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. 

துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வரும் 9வது மகளிர் டி20 உலகக் கோப்பையில், 10 அணிகள் இருபிரிவுகளாக மோதின. லீக் சுற்றின் முடிவில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகள் போட்டியில் இருந்து வெளியேறின. இந்நிலையில் இன்று துபாயில் நடைபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. நாளை சார்ஜாவில் நடைபெறும் 2வது அரையிறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதையடுத்து இறுதிப் போட்டி வரும் 20ம் தேதி துபாயி நடைபெறுகிறது.

Night
Day