மகளிர் ப்ரிமீயர் லீக் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகளிர் ப்ரிமீயர் லீக் தொடரில் உபி வாரியர்சை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 2வது மகளிர் ப்ரிமீயர் லீக் தொடர் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில், மும்பை, டெல்லி, பெங்களூரு, குஜராத், உபி உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று நடைபெற்ற போட்டியில் உபி வாரியர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதின. இதில், முதலில் விளையாடிய உபி வாரியர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தன. 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 14 புள்ளி 3 ஓவரில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 123 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா அதிரடியாக ஆடி 64 ரன்களை குவித்தார். 

varient
Night
Day