மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி : தமிழக வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மாநில அளவிலான வலு தூக்கும் போட்டிகளின் துவக்க விழா நடைபெற்றது. தமிழ்நாடு வலுதூக்கும் சங்கம் மற்றும் நாமக்கல் மாவட்ட வலுதூக்கும் சங்கம் சார்பில் 3 நாட்கள் நடைபெற உள்ள இப்போட்டிகளில், சப் ஜூனியர்,  ஜூனியர், சீனியர் பிரிவுகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் சர்வதேச வலுத்தூக்கும் வீரர், சர்வதேச நடுவர், தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தின் செயலாளர் நாகராஜன் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி போட்டிகளை துவக்கி வைத்தனர்.

Night
Day