மிகவும் கொடூரமான உடற்கட்டமைப்பு கொண்டவர் என அழைக்கப்பட்டவர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 உலகின் மிகவும் கொடூரமான உடற்கட்டமைப்பை கொண்டவர் என பரவலாக அழைக்கப்பட்ட இல்லியா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

6 அடி உயரமும், 155 கிலோ எடைக்கொண்டவருமான இல்லியா, பல்வேறு ஆணழகன் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். உடற்கட்டமைப்பை மேம்படுத்த ஒரு நாளைக்கு இரண்டரை கிலோ இறைச்சியை உண்ட இல்லியா, கடந்த ஆறாம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு பெலாரஸ் நாட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு அவர் கோமா நிலைக்கு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Night
Day