முதல் நிலை விதிமீறல் - பும்ராவுக்கு ஐ.சி.சி. கண்டிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஐ.சி. சி. விதிகளை மீறிய பும்ராவுக்கு ஒரு அபராத புள்ளி விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது, இங்கிலாந்து ஓல்லி போப் இரண்டாவது இன்னிங்சில் விளையாடி கொண்டிருந்தார். 81வது ஓவரின் போது ஓல்லி போப் ரன் எடுக்க ஓடிய நிலையில், அவருக்கு குறுக்கே ரன் எடுப்பதை தடுக்கும் விதமாக பும்ரா நின்றுகொண்டிருந்தார். அப்போது இருவரும் மோதும் சூழல் ஏற்பட்ட நிலையில் பும்ராவும் ஓல்லி போப்பிடம் வருத்தம் தெரிவித்தார். அதே சமயம் பும்ராவின் நடத்தையை கண்டித்துள்ள ஐ.சி.சி. முதல் நிலை விதிமீறலுக்காக ஒரு அபராத புள்ளி விதித்தது. கடந்த 24 மாதங்களில் முதல் முறையாக பும்ரா விதிகளை மீறியது குறிப்பிடத்தக்கது.

Night
Day