முதல் வெற்றியைப் பதிவு செய்தது பாகிஸ்தான் அணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், கனடாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. நியூயார்க்கில் ஏ பிரிவில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த கனடா அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 
106 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆரோன் ஜான்சன் 52 ரன்கள் எடுத்ததார். அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து 
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 
53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

varient
Night
Day