மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தொடர் தோல்விகளை சந்தித்துவரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாக முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார். முன்னாள் சாம்பியனான மும்பை அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து 3 தோல்விகளை சந்தித்துள்ளது. ரோகித் ஷர்மா தலைமையில் 5 கோப்பைகளை வென்றுள்ள மும்பை அணி, ஹர்திக் பாண்டியா தலைமையில் தொடர் தோல்விகளை சந்திப்பது ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், மேற்குவங்க அமைச்சருமான மனோஜ் திவாரி, மும்பை அணியின் தலைமையை மாற்றவேண்டிய நேரம் இது எனவும், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இந்த தருணத்தை பயன்படுத்தி மீண்டும் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

Night
Day