ரஞ்சி கோப்பை மும்பை அணிக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஞ்சி கோப்பையை வென்ற மும்பை அணிக்கு 5 கோடி ரூபாய் கூடுதலாக வழங்கப்படும் என மும்பை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. விதர்பா அணிக்கு எதிரான இறுதி போட்டியில் வென்று ரஞ்சி கோப்பையை 42வது முறையாக மும்பை அணி வென்றது. ரஞ்சி கோப்பை போட்டிகளில் கலந்து கொண்டு சிறந்த பங்களிப்பை வழங்கிய மும்பை அணி வீரர்களுக்கு, வழக்கமான தொகையை விட கூடுதலாக ஐந்து கோடி ரூபாய் வழங்கப்படும் என மும்பை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் பிசிசிஐ நடத்திய ஏழு தொடர்களில் வென்றது மும்பை அணிக்கு பெருமையாகும் என மும்பை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Night
Day